காவிரி விவகாரம்: 9ம் தேதி பந்த் உறுதி- திமுக அறிவிப்பு
சென்னை:
மேட்டூர் அணையில் தற்போது திறந்து விடப்படும் 15,000 கன அடி நீர் சம்பா பயிரைக் காப்பாற்றுவதற்குப்போதுமானதாக இருக்காது என்று திமுக விவசாயப் பிரிவு செயலாளர் கே.பி. ராமலிங்கம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரியில் கர்நாடக அரசு உடனடியாக நீரைத் திறந்துவிட தமிழக அரசு வற்புறுத்த வேண்டும் என்பதற்காக வரும்9ம் தேதி காவிரி டெல்டா பகுதிகளில் பந்த் நடத்த திமுக விவசாயப் பிரிவு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த பந்த்தைத் தடுத்து நிறுத்துவதற்காக, 9ம் தேதி வரை மட்டுமே வினாடிக்கு 15,000 கன அடி நீரைத் திறந்துவிடவேண்டும் என்று தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
சம்பா பயிரைக் காப்பாற்றுவதற்கு இந்த 15,000 கன அடி நீரெல்லாம் போதாது. இந்த நீரால் இரண்டு லட்சம் ஏக்கர்நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் தற்போதைக்கு மட்டுமே பிழைக்கும்.
ஆனால் 9ம் தேதிக்குப் பின்னர் சம்பா பயிர்களின் கதி என்ன? நீர் இல்லாவிட்டால் மீண்டும் அவை கருகி விடும்வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
எனவே காவிரியில் கர்நாடக அரசு உடனடியாக நீரைத் திறந்துவிட தமிழக அரசு வற்புறுத்த வேண்டும் என்றுகோரி நாங்கள் அழைப்பு விடுத்துள்ள பந்த் திட்டமிட்டபடி 9ம் தேதி நடக்கும்.
காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்துவிட்டால் மட்டுமே சம்பா பயிர்கள் முழுமையாகப் பிழைக்கும் என்றார்ராமலிங்கம்.
-->












Click it and Unblock the Notifications