மதுரை கருவூலத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை
மதுரை:
மதுரை கருவூல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று திடீரென்று சோதனை நடத்தினர்.மேலும் 3 நாட்களுக்கு சோதனை நடைபெறும் என்றும் தெரிகிறது.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியத்தைக் கேட்டு கருவூல அலுவலகத்தை நாடியபோது, அங்குள்ளஊழியர்கள் சிலர் அவர்களிடம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, நேற்று கருவூலஅலுவலகத்தில் அவர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது லஞ்சம் பெற்றுக் கொண்டிருந்த ஒரு கருவூல அலுவலக ஊழியரையும் லஞ்ச ஒழிப்புத் துறைஅதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.
மேலும் அந்த அலுவலகத்தில் வெளி ஆட்களும் தற்காலிகமாக வேலைக்கு நியமிக்கப்பட்டிருந்ததாகவும் லஞ்சஒழிப்பு அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
ஆனாலும், தேவையில்லாமல் குற்றம் சாட்டி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள்தான் தங்களைத் துன்புறுத்துவதாககருவூல ஊழியர்கள் பதிலுக்குக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு இந்தச் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறியுள்ளனர்.
இரண்டு உயர் அதிகாரிகள் உள்பட மூன்று பேர் மீது லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் கூறியஅவர்கள், இது தொடர்பாக யாரையும் இதுவரை கைது செய்யவில்லை என்றும் தெரிவித்தனர்.
தேவைப்பட்டால் வேறு சில துறைகளிலும் சோதனை நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர். இதனால்மதுரையில் உள்ள சில அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு "கிலி" ஏற்பட்டுள்ளது.
-->