பொது வேட்பாளருக்கு "நோ சான்ஸ்": கம்யூனிஸ்ட்டுகள் கைவிரிப்பு
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு வாய்ப்பில்லை என்று இந்திய மற்றும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று பாமக,புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் வலியுறுத்தின.
குறிப்பாக திமுக வேட்பாளருக்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனரான டாக்டர்ராமதாஸ் கூறினார். இதுதொடர்பாக அனைத்து எதிர்க் கட்சிகளுக்கும் கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன.
அதிமுக அரசுக்கு எதிரான கருத்துக்களையே அனைத்து எதிர்க்கட்சிகளும் கொண்டுள்ளன. இருப்பினும், பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சியை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக்கவில்லை.
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்பது, மானியங்களைக் குறைப்பது, மின் கட்டணங்களைஅதிகரிப்பது போன்ற செயல்களை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக, மதிமுக, பாமகபோன்ற கட்சிகள் எதிர்க்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இந்த நிலையில் அந்தக் கட்சிகளுடன் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த முடியாது என்று அக்கட்சியின்மாநிலப் பொதுச் செயலாளரான வரதராஜன் கூறியுள்ளார்.
இதே கருத்தையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் நல்லகண்ணுவும் வெளியிட்டுள்ளார். எனவே பொதுவேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-->