23ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 23ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
சட்டசபையைக் கூட்டுவதற்கான உத்தரவை ஆளுநர் ராமமோகன் ராவ் பிறப்பித்துள்ளார்.
வரும் 23ம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கும் சட்டசபைக் கூட்டத் தொடரில்ஆளுநர் உரை நிகழ்த்துவார்.அத்தோடு அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும்.
வரும் நிதியாண்டில் அரசு செயல்படுத்த உள்ள நலத் திட்டங்கள் குறித்த கொள்கை அறிவிப்புகள் குறித்து ஆளுநர்உரை நிகழ்த்துவார். இந்த ஆளுநர் உரையின் மீதான விவாதங்கள் அடுத்த ஒரு சில நாட்களுக்கு நடைபெறும்.
இறுதியாக ஆளுநர் உரை மீதான விவாதங்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பதிலளிப்பார்.
ஜெயலலிதா பதிலளித்த பின்னர் சில நாட்களுக்கு சட்டசபை ஒத்திவைக்கப்படும். பட்ஜெட் கூட்டத் தொடர்தொடங்கும் தேதி குறித்து அதன் பின்னர் ஆளுநர் அறிவிப்பார்.
இதற்கிடையே வரும் 23ம் தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத் தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும்என்பது அலுவல் ஆய்வுக் குழுவில் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று ஏற்கனவே சபாநாயகர் காளிமுத்துகூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications