இலவச உணவு: விவசாயிகளை அசிங்கப்படுத்துகிறது அரசு- கிருஷ்ணசாமி
கோவை:
காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு இலவச மதிய உணவு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது, விவசாயிகளைகொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விவசாயிகளுக்கு இலவசமாக பகல் உணவு வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
இது அவர்களை கேவலப்படுத்தும் செயலாகும். அதற்குப் பதிலாக மாந்தோறும் 30 கிலோ அரிசி மற்றும் நிவாரணப் பொருட்களைவழங்கலாம்.
பட்டினிச் சாவுகள் குறித்து உயர்நீதிமன்றம் சூடு பேட்ட பிறகே அரசு மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தால்விவசாயிகளுக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.
காவிரியில் நீர் பெற்று விவசாயிகள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும்அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
-->












Click it and Unblock the Notifications