வாணியம்பாடி அருகே 2 பட்டதாரிகள் பிடிபட்டனர்: தீவிரவாதிகளா?
வாணியம்பாடி:
வாணியம்பாடி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்த 2 பட்டதாரிகளைப் போலீசார்பிடித்தனர். அவர்கள் தீவிரவாதிகளா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள மாதேகடப்பா கோட்டை பகுதியில்அடையாளம் தெரியாத இரண்டு பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடுவதாகப் போலீசாருக்குத் தகவல்கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த இரண்டு பேரையும் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, ஒருவர் திருச்சியைச் சேர்ந்த நந்தா என்றும் அவர் ஒரு பி.டெக். பட்டதாரி என்பதும் தெரிய வந்தது.மற்றொருவர் ராமநாதபுரம் மாவட்டம் நெல்வாயிலை அடுத்த மனைப்பஞ்சம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாஜி என்றஎம்.ஏ. பட்டதாரி என்பதும் தெரிய வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றபோது இருவருக்கும் பழக்கம்ஏற்பட்டதாகத் தெரிகிறது.
அவர்கள் இருவரும் தீவிரவாதிகளா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
-->