For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை போகி பண்டிகை: டயர், பிளாஸ்டிக் எரித்தால் கடும் நடவடிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நாளை கொண்டாடப்படவுள்ள போகிப் பண்டிகையையொட்டி டயர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களைஎரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் துணை கமிஷனர்சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொங்கல் தினத்திற்கு முன்தினம் போகிப் பண்டிகை கொண்டாடப்படுவது தமிழர்களின் மரபு.

"பழையன கழிதலும், புதியன புகுதலும்..." என்பதற்கேற்ப பழைய பொருட்களை எல்லாம் மக்கள் தீயிட்டுக்கொளுத்துவது வழக்கம்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக "போகித் தீ" கொளுத்துகிறோம் என்று கூறி டயர்களையும், பிளாஸ்டிக்பொருட்களையும் பொதுமக்கள் கொளுத்தி வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் படுமோசமாகப்பாதிக்கப்படுகிறது.

ஏற்கனவே பனிக்காலமாகிய தற்போது காலையில் விடிந்து வெகு நேரமாகியும் கூட பனி விலகாமல் மக்களைவதைத்து எடுத்து வருகிறது. அந்த அளவுக்கு மூடுபனி ஏற்பட்டு, எதிரே யார் வருகிறார்கள் என்பது கூடத்தெரியாமல் போகும் நிலை ஏற்படுகிறது.

இதனால் காலை நேரங்களில் சாலைப் போக்குவரத்தும், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துக்களும் அடிக்கடிபாதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் போகித் தீயும் கொளுத்தப்பட்டால், அதன் மூலம் கிளம்பும் புகையும் மூடுபனியுடன் சேர்ந்துகொண்டு மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாவார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் போகிப் பண்டிகை தினத்தன்று காலை 9 மணி ஆகியும் கூட கடுமையானபுகை மூட்டம் விலகாத நிலைதான் இருந்து வந்தது.

எனவே பொதுமக்கள் போகிப் பண்டிகையை அளவோடு கொண்டாட வேண்டுமென்று சென்னை மாநகரப்போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டயர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதுணைக் கமிஷனரான சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X