திமுக சார்பில் கண்ணகி சிலை: கருணாநிதி திறந்தார்
சென்னை:
திமுகவின் இளைஞர் அணி அலுவலகமான "அன்பக"த்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்ணகியின் சிலையைஅக்கட்சியின் தலைவர் கருணாநிதி திறந்து வைத்தார்.
நேற்று மாலை நடைபெற்ற கண்ணகி சிலை திறப்பு விழாவில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்,இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.
கண்ணகியின் சிலையைத் திறந்துவைத்து கருணாநிதி பேசுகையில்,
கண்ணகி சிலையைத் திறக்க வேண்டும் என்ற எங்களுடைய எண்ணம் நிறைவேறிவிட்டது. ஆனால் எங்களுக்குக்கிடைக்க வேண்டிய நியாயம் கிடைக்கவே இல்லை.
கண்ணகி சிலையை அண்ணா சாலையில் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் அரசுக்குவேண்டுகோள் விடுத்தோம். ஆனால் அந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு விட்டது. இது நியாயம்தானா?
இது நியாயம்தானா என்று பொதுமக்களாகிய உங்களிடமே நான் கேட்கிறேன். நீங்கள்தான் நியாயம் வழங்கவேண்டும். அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது என்றார் கருணாநிதி.
பின்னர், கண்ணகியின் சிலையை வடிவமைத்த சிற்பி தீனதயாளனுக்கு கருணாநிதி மோதிரம் அணிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications