நெடுமாறனுக்கு ஜாமீன் கிடைக்குமா?: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட 5பேர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகின்றன.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி கடந்த ஆகஸ்டு 1ம் தேதி நெடுமாறனை தமிழக போலீசார்கைது செய்தனர்.

மேலும் தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளரான சுப. வீரபாண்டியன், நிர்வாகிகளான பாவாணன்,தாயப்பன், பரந்தாமன் ஆகியோரும் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் ஐந்து பேரும் ஜாமீன் கோரி சென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா தனி நீதிமன்றத்தில் மனுக்களைத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதையடுத்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள்மீதான விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதி என். தினகர் மற்றும் நீதிபதி ஆர். பாலசுப்பிரமணியன் ஆகியோர்அடங்கிய பெஞ்ச் முன் நாளை நடைபெறவுள்ளது.

இதற்கிடையே புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக நெடுமாறன் மீது புதிய வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.திண்டுக்கல்-செம்பட்டியில் கடந்த 1991ம் ஆண்டும், கொடைக்கானல்-தாண்டிக்குடியில் 1993ம் ஆண்டும் அவர்புலிகளை ஆதரித்துப் பேசியதாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

ஏற்கனவே திருச்செந்தூர் நீதிமன்றத்திலும் நெடுமாறன் மீது தொடரப்பட்ட ஒரு புலிகள் தொடர்பான வழக்குவிசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீன் கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ள முதல் முக்கியத் தலைவர் நெடுமாறன்தான். நான் ஜாமீன் கோர மாட்டேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தான் கைது செய்யப்பட்ட பொடா சட்டத்தின் 21வது பிரிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறார்வைகோ.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+