சாத்தான்குளம் இடைத் தேர்தல்: நீலமேகவர்ணம் வேட்பு மனு தாக்கல் செய்தார்
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தொகுதி அதிமுக வேட்பாளரான நீலமேகவர்ணம் இன்று தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல்செய்தார்.
சாத்தான்குளம் இடைத் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.
குறிப்பாக, அதிமுகவினர் சாத்தான்குளம் தொகுதியில் படு சுறுசுறுப்புடன் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.சாத்தான்குளம் ஒன்றியத் தலைவரான நீலமேகவர்ணமும் அப்படித்தான் தேர்தல் பணிகளை ஓடியாடிக் கவனித்துக்கொண்டிருந்தார்.
தேர்தல் விளம்பரத்திற்காக ஒரு சுவற்றில் வெள்ளையடித்துக் கொண்டிருந்தபோதுதான் அதிமுக வேட்பாளராகதான் அறிவிக்கப்பட்டது நீலமேகவர்ணத்துக்குத் தெரிய வந்தது.
அதிமுக வேட்பாளரும் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. அதிமுகவினர்முழுவீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று நீலமேகவர்ணம் தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
தன் சொந்த ஊரான படுக்கப்பத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, பின்னர் அருகில் மற்றகிராமங்களில் உள்ள எம்.ஜி.ஆர். உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் சிலைகளுக்கும் மாலை அணிவித்த பின்சாத்தான்குளம் வந்தார் நீலமேகவர்ணம்.
பின்னர் பொதுப்பணித் துறை அமைச்சரும் அதிமுக தேர்தல் பணிக் குழுவின் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம்தலைமையில் சாத்தான்குளத்தில் அதிமுகவினருடன் ஊர்வலமாகச் சென்ற நீலமேகவர்ணம், இன்று பகல் சுமார் 1மணிக்கு உதவித் தேர்தல் அதிகாரியிடம் தன் மனுவைத் தாக்கல் செய்தார்.
இதற்கிடையே இந்து நாடார் வகுப்பைச் சேர்ந்த நீலமேகவர்ணத்துக்குப் போட்டியாக சிறுபான்மை கிருஸ்தவநாடார் வகுப்பைச் சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் கட்சி களத்தில் இறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பெரும்பான்மையான இந்து ஓட்டுக்களைக் கவருவதற்காக இந்து நாடார் வகுப்பைச் சேர்ந்த ஒருவரையேகாங்கிரஸ் கட்சியும் தன் வேட்பாளராக அறிவிக்கும் என்று தற்போது கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில்தன் வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications