புதிய வீராணம்: மக்களை திசை திருப்புகிறார் ஜெ.- ராமதாஸ் குற்றச்சாட்டு
சென்னை:
புதிய வீராணம் திட்டத்தை காவிரி பிரச்சனையோடு தொடர்புபடுத்தி மக்களைத் திசை திருப்ப முதல்வர்ஜெயலலிதா முயற்சிக்கிறார் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பக்கத்திலுள்ள சென்னைக்கே கடலூர் மாவட்டத்திலிருந்து குடிநீர் தர மறுத்து போராட்டம் நடத்தினால்தமிழகத்திற்கு கர்நாடகம் எப்படி நீர் கொடுக்கும் என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பாக ராமதாஸ் இன்ற நிருபர்களிடம் கூறுகையில்,
புதிய வீராணம் திட்டத்தை காவிரி பிரச்சனையோடு ஒப்பிட்டு ஜெயலலிதா பேசுவது பொருத்தமற்றது. எதற்கு எதைஉதாரணம் காட்ட வேண்டும் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை.
இவ்வாறு பேசி மக்களைத் திசை திருப்புவதற்கு முயற்சிக்காமல் இந்தத் திட்டத்தைப் பற்றி ஜெயலலிதாஉருப்படியாகச் சிந்திக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தால் சென்னை மாநகர மக்களுக்குக் குடிநீர் கிடைக்காமல், கடலூர் மாவட்ட விவசாயிகளும் நீரின்றிபரிதவிக்கும் மோசமான நிலை ஏற்பட்டுவிடக் கூடாது.
இதற்காகத்தான் கடலூர் மாவட்ட விவசாயிகளையும் தமிழக அரசையும் நாங்கள் தொடர்ந்து எச்சரிக்கைசெய்கிறோம் என்றார் ராமதாஸ்.
-->