சென்னையில் 14 புரதான காவல் நிலையங்களுக்கு விரைவில் "கடப்பாரை"!
சென்னை:
சென்னை நகரில் இங்கிலாந்து ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட காவல் நிலைய கட்டடங்களை இடித்து விட்டுஅவற்றுக்கப் பதிலாக புதிய கட்டிடங்களைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை நகரில் 14 காவல் நிலையங்கள் இங்கிலாந்து ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைய கட்டிடங்களில்இயங்கி வருகின்றன.
எழும்பூர், சைதாப்பேட்டை, அண்ணாசாலை, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி, திருவொற்றியூர்,யானைக்கவுனி, நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு, சிந்தாதிரிப்பேட்டை, புளியந்தோப்பு, பூக்கடை ஆகியவைஉள்ளிட்ட காவல் நிலையங்களே விரைவில் இடிபடப் போகும் கட்டிடங்களாகும்.
இந்தக் கட்டிடங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவை. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில்கட்டப்பட்டவை. ஆனால் மயிலாப்பூர் காவல் நிலைய கட்டிடமோ அதற்கும் முன்பே கட்டப்பட்டது (கடந்தஆண்டுதான் அதற்கு 100 வயது ஆனது).
தற்போது இந்தக் கட்டிடங்கள் பழமையடைந்துள்ள நிலையில், நீண்ட நாட்களுக்கு இந்தக் கட்டடங்கள் நீடித்துஇருக்காது என்று கருதப்படுகிறது.
எனவே இவற்றை இடித்துவிட்டு புதிய நவீன கட்டிடங்களைக் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் இடிப்புப்பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
-->