For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோவை மீண்டும் சந்திக்கிறார் பெர்னாண்டஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர்வைகோவை சந்திப்பதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் நாளை மறுநாள் வேலூர்செல்கிறார்.

வைகோ கைது செய்யப்பட்டு சுமார் ஆறு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அவர் மீதுகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சியான பா.ஜ.க. தலைவர்கள் வந்து கூட பார்க்காத நிலையில்பெர்னாண்டஸ்தான் முதலில் வேலூர் சிறைக்கு வந்து வைகோவைச் சந்தித்தார்.

0அதன் பின் பல மாதங்கள் கழித்து, பல யோசனைகளுக்குப் பிறகே பா.ஜ.க. தலைவரான வெங்கய்யா நாயுடுவேலூர் சிறை சென்று வைகோவைச் சந்தித்தார். இருந்தாலும் பா.ஜ.க. மீது கடும் அதிருப்தியுடன் இருக்கிறார்வைகோ.

இந்நிலையில், வைகோவை மீண்டும் சந்தித்துப் பேசுவதற்காக நாளை மறுநாள் வேலூர் சிறைக்கு பெர்னாண்டஸ்வருகிறார்.

பா.ஜ.கவுடன் வைகோ கடும் அதிருப்தியில் உள்ளதால் அரசியல் சூழ்நிலை குறித்தும் அப்போது இருவரும் பேசிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்னாண்டஸ் வருவதையொட்டி வேலூரில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X