நெல்லை அருகே அரசு பஸ்களை சிறை பிடித்த கிராம மக்கள்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

திருநெல்வேலி மாவட்டம் உவரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 2 அரசு பஸ்கள் மற்றும் ஒரு தனியார் மினி பஸ்சைசிறைப் பிடித்துக் கொண்டு சுமார் 4 மணி நேரம் கழித்தே அவற்றை விடுவித்தனர்.

கடலோரத்தில் உள்ள உவரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்களது கிராமத்திலேயே கிராம நிர்வாக அலுவலகம்அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து பஸ்களை சிறைப் பிடிக்கஅவர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து உவரிக்கு வந்த இரண்டு அரசு பஸ்கள், ஒரு தனியார் மினி பஸ்சை நேற்று காலை 11.30மணியளவில் அவர்கள் சிறைப் பிடித்தனர்.

உவரி கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் அந்தோணி தலைமையில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பஸ்களைசிறைப் பிடித்துள்ள தகவல் அறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

வருவாய்த் துறை அதிகாரிகளும் விரைந்து வந்து கிராம மக்களுடன் சமரசப் பேச்சு நடத்தினர்.

இதையடுத்து பிற்பகல் சுமார் 2.30 மணிக்குதான் தாங்கள் சிறைப்பிடித்த பஸ்களை உவரி கிராம மக்கள்விடுவித்தனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+