3 வயது குழந்தையிடம் காம வெறி: பிளஸ் டூ "மிருகம்" கைது
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிளஸ் டூ படிக்கும் மாணவனைப்போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ளது கனியாகுளம். இந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுமிசுபாஷிணி. இந்தச் சிறுமிக்கு 3 வயது ஆகிறது.
சுபாஷிணி தனது வீட்டுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த பிளஸ் டூ மாணவனானடெனிஸ்ராஜ் என்பவன், அவளை ஏமாற்றி அப்பகுதியில் இருந்த நூலகத்திற்கு கூட்டிச் சென்றான்.
பின்னர் அங்கு தன்னுடைய காம வெறியை அந்தச் சின்னஞ்சிறு சிறுமியிடம் தீர்த்துக் கொள்ள முயற்சித்துள்ளான்அந்த மிருகம்.
இதைப் பார்த்து பயந்து போன சிறுமி அலறத் தொடங்கினாள். சப்தம் கேட்ட அப்பகுதி மக்கள் பதறிப் போய்அங்கு சென்று, அங்கு நடந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.
உடனடியாக டெனிஸ்ராஜைப் பிடித்து அவனை சராமாரியாக அடித்து உதைத்தனர். ரத்தக் காயங்களுடன் அவனைவடசேரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸார் டெனிஸ்ராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி சுபாஷிணி அரசு மருத்துவமனையில்பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டாள்.
-->












Click it and Unblock the Notifications