குவைத்திலிருந்து வந்த விமானத்தில் கோளாறு: திருச்சியில் நின்றது
திருச்சி:
குவைத் நாட்டிலிருந்து திருச்சிக்கு வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. ஆனாலும்பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர்.
குவைத்திலிருந்து கோழிக்கோடு, திருச்சி வழியாக சென்னைக்குச் செல்லும் ஐஸி-994 விமானம் நேற்று முன்தினம்பகல் 11 மணிக்கு வழக்கம்போல் திருச்சிக்கு வந்து சேர்ந்தது.
திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கிய அந்த விமானம் ஓடுபாதையில் சிறிது தூரம் ஓடிய பின்னர், திடீரென்றுமேற்கொண்டு நகராமல் நின்று விட்டது.
இதனால் அதிலிருந்த பயணிகள் சிறிது பதற்றம் அடைந்தனர். இருந்தாலும் பயணிகள் அனைவரும் அடுத்த சிறிதுநேரத்திலேயே விமானத்தை விட்டு பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர்.
இதையடுத்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டனர்.இயந்திரக் கோளாறு காரணமாகத்தான் அந்த விமானம் ஓடுபாதையில் நின்று விட்டதாக இந்தியன் ஏர்லைன்ஸ்அதிகாரி ஒருவர் கூறினார்.
மாலை 6 மணி வரை அந்த விமானம் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டிருந்ததால் வேறு எந்த விமானமும்திருச்சியில் வந்து தரையிறங்க முடியவில்லை. பகல் 1 மணிக்கு கொழும்பிலிருந்து வரவேண்டிய விமானம் கூடஇரவு 7.30 மணிக்குத்தான் வந்து சேர்ந்தது.
இதற்கிடையே குவைத் விமானத்திலிருந்த இறக்கப்பட்ட பயணிகள் அனைவரும் பின்னர் ஏ.சி. கார்கள் மூலமேசென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-->