சம்பா சோகம்: மேலும் ஒரு விவசாயி தூக்கு போட்டு தற்கொலை
திருத்துறைப்பூண்டி:
சம்பா பயிர்கள் கருகியதால் பெண் விவசாயி அதிர்ச்சியில் இறந்த சம்பவம் அடங்குவதற்குள் பேராவூரணி அருகேஅதே காரணத்துக்காக இளம் விவசாயி ஒருவர் தன் வயலில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காவிரியில் கர்நாடகம் தமிழகத்திற்கு நீர் திறந்து விடாததால் காவிரி டெல்டா பகுதிகளில் நீரின்றி சம்பா பயிர்கள்தொடர்ந்து கருகி வருகின்றன.
இதைப் பார்த்து பல விவசாயிகள் மன வேதனையில் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் இறந்துகொண்டிருக்கின்றனர். இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே திருத்துறைப்பூண்டி அருகே முத்துலட்சுமி என்ற பெண் விவசாயி தன் வயலில் சம்பாபயிரிட்டிருந்தார். இதற்காக ரூ.10,000 வரை அவர் கடன் வாங்கியிருந்தார்.
ஆனால் நீர் இல்லாமல் அவருடைய நிலத்தில் சம்பா பயிர்கள் வாடத் தொடங்கியதைக் கண்டு அவர் மன வேதனைஅடைந்தார். கடந்த சில நாட்களாக எப்போதும் இதே நினைவாக சோகமாகவே அவர் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை தன்னுடைய வயலுக்குச் சென்றிருந்தார் முத்துலட்சுமி. அங்கு சம்பா பயிர்கள் முற்றிலும்கருகிப் போய் சாய்ந்திருப்பதைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்த அவர், திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு அந்தஇடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
சிறிது நேரம் கழித்து முத்துலட்சுமியின் உறவினர்கள் அவருடைய உடலை மீட்டு வீட்டுக்குக் கொண்டு வந்தனர்.
சம்பா பயிர்கள் கருகிய சோகத்தால் முத்துலட்சுமி இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-->