8 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த 8,000 திருட்டு வி.சி.டிக்கள்
சென்னை:
சென்னையில் 8 அடி ஆழ ரகசிய அறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 8,000 திருட்டு வி.சி.டிக்களைப்போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் திருட்டு வி.சி.டிக்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. திருட்டுவி.சி.டிக்களை ஒழிக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் கூட, புற்றீசல் போல் அவற்றின்எண்ணிக்கை பெருகிக் கொண்டேதான் உள்ளது.
இந்நிலையில் இன்று காலை சென்னை-பர்மா பஜாரில் சில கடைகளில் போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு கடையின் தரைப் பகுதியில் ரகசிய அறை ஒன்று இருப்பதைப் போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்த ரகசிய அறைக்குள் சோதனை நடத்தியபோது, அதில் சுமார் 8,000 திருட்டு வி.சி.டிக்கள் மறைத்துவைக்கப்பட்டிருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ந்தனர். அவை அனைத்துமே சமீபத்தில் வெளியானதிரைப்படங்கள் மற்றும் புளூ பிலிம் வி.சி.டிக்களாகும்.
அவற்றைக் கைப்பற்றிய போலீசார், இந்தத் திருட்டு வி.சி.டிக்களின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் என்று கூறினர்.தமிழகம் முழுவதும் இந்தத் திருட்டு வி.சி.டிக்களை விற்பனை செய்வதாக அந்தக் கடையின் உரிமையாளர் மஜீத்கூறினார்.
மஜீத்தைக் கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->