சாத்தான்குளம்: 2 சுயேச்சைகள் வாபஸ், களத்தில் 25 பேர்

Subscribe to Oneindia Tamil

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் இடைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த 27 பேரில் 2 சுயேச்சைகள் வேட்பு மனுக்களை வாபஸ்பெற்றுவிட்டனர். இதனால்ஸ இப்போது 25 பேர் களத்தில் உள்ளனர்.

சாத்தான்குளத்தில் வரும் 26ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிட மொத்தம் 35 பேர் மனு தாக்கல் செய்தனர்.இதில் 8 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் வேட்பு மனு பரிசீலனையின்போது நிராகரிக்கப்பட்டன.

மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும் இந் நிலையில் இன்று காலை 2 சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் மொத்தம் 25 பேர் களத்தில் உள்ளனர். வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் மாலையில்வெளியிடப்படும்.

அதன்பிறகு அரசியல் கட்சிகள் அல்லாத வேட்பாளர்களின் சின்னங்கள் ஒதுக்கப்படும். வரும் 26ம் தேதி வாக்குப் பதிவுநடக்கிறது. மார்ச் 1ம் தேதி தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் வாக்குகள் எண்ணும் பணி நடக்கிறது.

இதற்கிடையே,தேர்தலை சிறப்பாக நடத்தும்பொருட்டு, அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பைக் கோர தேர்தல்பார்வையாளர்களான ராஜா மற்றும் அன்சோலி ஆர்யா தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சிக்கூட்டம் மாலை நடக்கிறது. இதில் தேர்தல் அதிகாரி வேலப்பனும் கலந்து கொள்கிறார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+