தமிழகத்தில் 2 சாலை விபத்துக்கள்: 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

தேனி & திருவண்ணாமலை:

தமிழகத்தில் இன்று ஏற்பட்ட 2 வெவ்வேறு சாலை விபத்துக்களில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம் முத்துத் தேவன்பட்டி அருகே ராஜேந்திரன் மற்றும் செல்வராஜ் ஆகிய இரண்டு பேர் ஒரு பைக்கில்சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாகனம் அந்த பைக்கில் பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இவ்விபத்தில் ராஜேந்திரனும் செல்வராஜும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை அருகே...

இதற்கிடையே திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்பட்ட மற்றொரு விபத்தில் பஸ்சும் லாரியும் நேருக்கு நேர்மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் இறந்தனர்.

இன்று காலை வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

போலூர் அருகே அந்த பஸ் மீது திருவண்ணாமலையிலிருந்து சென்று கொண்டிருந்த ஒரு லாரி நேருக்கு நேர்பயங்கரமாக மோதியது.

இதில் பஸ்சில் பயணம் செய்த மூன்று பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த பலர் வேலூர்மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த இரு விபத்துக்கள் குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+