காஸ் சிலிண்டர்களை திருடி விற்றவர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காலியான காஸ் சிலிண்டர்களைத் திருடி, காஸ் நிரப்பி அவற்றை விற்று வந்த நபரைப் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை, கிண்டி பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. கிண்டி, அம்பத்தூர், அமைந்தகரை பகுதிகளில் உள்ள பல்வேறுதொழிற்சாலைகளில் கவனிப்பாரின்றி கிடக்கும் காஸ் சிலிண்டர்களைத் திருடுவது இவரது வழக்கம்.

திருடிய காஸ் சிலிண்டர்களில் பின்னர் காஸை நிரப்புவார். அதன் பிறகு அவற்றைக் குறைந்த விலைக்குவிற்றுவிடுவார் மூர்த்தி.

அடிக்கடி காஸ் சிலிண்டர்கள் காணாமல் போய் விடுவதாக அமைந்தகரை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைசார்பில் போலீஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸார் வெகு தீவிரமாகக் கண்காணித்து மூர்த்தியைக் கைது செய்தனர். தொழில் நிறுவனத்திற்குள்வரும் லாரிகளை வழிமறித்து, லாரி டிரைவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து சிலிண்டர்களைத் திருடியதுஅப்போது தெரிய வந்தது.

மேலும், காலி சிலிண்டர்கள் மீதுள்ள லேபிள்களை எடுத்து விட்டு அதன் பிறகு காஸ் நிரப்பி, பின்னர் போலியானலேபிள்களை ஒட்டி விற்பனை செய்து வந்துள்ளார் மூர்த்தி.

கைது செய்யப்பட்ட மூர்த்தியிடமிருந்து 24 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+