"இன்னும் இருக்கிறது தீண்டாமைக் கொடுமை"
சென்னை:
தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை இன்னும் இருக்கிறது என தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. நல ஆணையஇயக்குநர் தயானந்த் கட்டாரியா கூறியுள்ளார்.
சென்னை-ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் சமூக நலத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தகருத்தரங்கைத் துவக்கி வைத்து அவர் பேசுகையில்,
எத்தனையோ கடுமையான நடவடிக்கைகள், சட்டங்களை அமல் செய்தும், தமிழகத்தில் இன்னும் தீண்டாமைக்கொடுமை நீடிக்கிறது.
தமிழகத்தின் பல கிராமங்களில் இரட்டை டம்ளர் முறை இன்னும் நீடிக்கிறது. இந்த முறையை அகற்ற அரசு சார்பில்பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் அது பலனளிக்கவில்லை.
கடந்த ஆண்டு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரைக் கொடுமைப் படுத்தியதாக 830 வழக்குகள்பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1.09 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
சமூகத்தின் மனநிலை மாறும் பட்சத்தில்தான் இது போன்ற தீண்டாமைக் கொடுமையை அகற்ற முடியும் என்றார்கட்டாரியா.
-->