தலையில் முக்காடு போட்டு திருமாவளவன் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபையில் ஆளுநர் உரை தமிழில் படிக்காமல் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் சென்னையில் நூதனப் போராட்டம் நடந்தது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் தலைகளில் முக்காடு போட்டுக் கொண்டு கலந்துகொண்டனர். கட்சியின் பொதுச் செயலாளரான திருமாவளவன் தலைமையில் இந்த நூதனப்போராட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடந்தது.

அப்போது திருமாவளவன் கூட்டத்தினரிடையே பேசுகையில்,

கடந்த 1979ம் ஆண்டிலிருந்து ஆளுநர் உரையை தமிழில் படிக்கும் முறை அமலில் இருந்துவருகிறது.

ஆனால் தற்போது அதற்குத் தடை விதித்திருப்பதன் மூலம் தமிழ்த் தாய் அவமரியாதைசெய்யப்பட்டிருக்கிறாள். தமிழுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது.

தலித் சமுதாயத்தினர், இந்துக்கள் அல்ல என்பதை வலியுறுத்தும் வகையில் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியொன்றில் 10,000 தலித் மக்கள் தங்களதுபெயர்களைத் தூய தமிழில் மாற்றிக் கொள்வார்கள் என்றார் திருமாவளவன்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+