முன்னாள் ராணுவ அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் முன்னாள் ராணுவ அதிகாரியின் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள், அங்கிருந்து ரூ.1.5லட்சம் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சென்னை பெசன்ட் நகர் பகுதியில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருவதால் மக்கள்பெரும் பீதியில்ஆழ்ந்துள்ளனர்.

பெசன்ட் நகர் பகுதியில் சில மாதங்களுக்கு முன் வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்தகாசாளரைக் கொன்று விட்டு பணத்தைக் கொள்ளையடித்து விட்டுத் தப்பினர். அதன் பிறகு பல முறைஅப்பகுதியில் உள்ள பல வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்நிலையில் முன்னாள் ராணுவ அதிகாரி வீட்டில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள நகைள் மற்றும்ரூ.1,500 பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பெசன்ட் நகரில் உள்ள பத்மநாபா நகர் பகுதியில் வசித்து வரும் பாலகோபால் என்ற அந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி, தன் மனைவியுடன் நேற்று மாலை பொருள்கள் வாங்குவதற்காககடைக்குப் போயிருந்தார்.

பின்னர் இரவு வீட்டுக்குத் திரும்பிய அவர், கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சிஅடைந்தார். பதறியபடி அவர்கள் இருவரும் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

அங்கு வீட்டுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் வாரியிறைத்துக் கிடந்தன. படுக்கறையில்உள்ள பீரோ உடைக்கப்பட்டு அங்கு வைத்திருந்த பாலகோபாலின் மனைவியுடைய ரூ.1.5 லட்சம்மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரிய வந்தது. மேலும் ரூ.1,500 பணமும் திருடுபோயிருந்தது.

இதையடுத்து பாலகோபால் போலீசாருக்குத் தகவல் தரவே, அவர்கள் விரைந்து வந்து விசாரணைநடத்தினர். அவர்கள் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+