மதுரை அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மருத்துவமனைக்குப் போன் செய்தஒருவர் தன்னை அல்-உம்மா அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறிக் கொண்டார்.பின்னர், மருத்துவமனையில் இரண்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி போனை வைத்துவிட்டார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மருத்துவமனைடீனுக்குத் தகவல் தரப்பட்டது.
இதையடுத்து டீன் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். போலீஸாரும் குவிந்தனர். பல்வேறுபிரிவுகளின் நோயாளிகளும் மருத்துவமனையைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
மோப்ப நாய்களுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்களும் போலீசாரும் மருத்துவமனையின் அனைத்துப் பகுதியிலும்சோதனை நடத்தினர்.
வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது வெறும் வதந்தி என்று தெரியவந்தது.
இந்தப் புரளியால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இச் சம்பவத்தையடுத்து மருத்துவமனையில்பைகள் தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.
-->