நாளை மறுநாள் பெட்ரோல் பங்குகள் இயங்காது
டெல்லி:
நாளை மறுநாள் (24ம் தேதி) நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகள் மூடப்படுகின்றன.
பெட்ரோல் நிலையங்களில் கலப்படம் அதிகரித்துவிட்டதையடுத்து சோதனைகளை பாரத் பெட்ரோலியம்,இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் போன்றவை தீவிரப்படுத்தியுள்ளன.
ஆனால், சோதனைகள் என்ற பெயரில் தங்களை பெட்ரோலிய நிறுவனங்கள் துன்புறுத்தி வருவதாகக் கூறி அதைஎதிர்த்து ஒரு நாள் அடைப்புப் போராட்டத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் குதிக்கின்றனர்.
இதனால் திங்கள்கிழமை நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகள் இயங்காது. நாளை ஞாயிற்றுக்கிழமைஎன்பதால் பெட்ரோல் பங்குகளுக்கு பெட்ரோல் நிறுவனங்கள் எரிபொருள்களை அனுப்பாது.திங்கள்கிழமை மூடப்பட்டுவிடும். இதனால் இன்று இரவே உங்கள் வாகனங்களுக்கு நாளைக்கேதேவையான பெட்ரோல், டீசலை போட்டுக் கொள்வது நல்லது.
இல்லாவிட்டால் நாளையே ஸ்டாக் இல்லை போர்டைத் தான் பார்க்க முடியும்.
-->