பெண் சாவுக்கு காரணமாக டாக்டர்கள்: அரசுக்கு மனித உரிமை ஆணையம் அபராதம்
சென்னை:
சிகிச்சை தருவதற்கு உரிய டாக்டர்கள் இல்லாத காரணத்தால் பரிதாபமாக இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1லட்சம் நஷ்டஈ டுதருமாறு மாநில சுகாதாரத் துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. 2001ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி விஷம் குடித்துவிட்டார்.இதையடுத்து அவரது சகோதரர் காமராஜ், மகேஸ்வரியை ஏற்காடு அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்.
ஆனால் அங்கு ஒரு டாக்டரும் இல்லை. பலமுறை டாக்டர்களுக்காக நர்சுகளிடம் அவர் போராடினார். ஆனால்டாக்ரட் வரும்போது தான் வருவார் என அவர்கள் அலட்சியமாகக் கூறிவிட்டனர். இதனால் சிறிது நேரத்தில்மகேஸ்வரி பதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக பணிநேரத்தில் பணியில் இல்லாத அரசு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநிலமனித உரிமைகள் ஆணையத்தில் காமராஜ் புகார் கொடுத்தார். இந்தப் புகாரை விசாரித்த மனித உரிமைகள்ஆணைய உறுப்பினர் நீதிபதி சம்பந்தம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு திடீர்விசிட் அடித்தார்.
அப்போதும் அந்த மருத்துவமனையில் ஒரு டாக்டரும் இல்லை. டாக்டர்கள் உரிய நேரத்தில் வருவதே இல்லைஎன்றும், சரியான சிகிச்சை தருவதும் இல்லை என்றும் அங்கிருந்த நோயாளிகள் நீதீபதியிடம் புகார் தெவித்தனர்.அதை சம்பந்தம் பதிவு செய்து கொண்டார்.
இதன் பின்னர் இந்த வழக்கில் சம்பந்தம் தீர்ப்பளித்தார். அதன் விவரம்:
அரசு டாக்டர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வராமல் இருப்பது உறுதியாகத் தெகிறது. மகேஸ்வரி விஷயத்தில்மனித உரிமை மீறல் நடந்துள்ளது தெள்ளத் தெளிவாகிறது. இதனால் மகேஸ்வயின் மரணத்திற்குக் காரணமாகஇருந்தது டாக்டர்கள்தான் என்பது உறுதியாகிவிட்டது.
எனவே அந்த டாக்டர்களை ஒழுங்காகப் பணியாற்ற வைக்கத் தவறிய மாநில அரசின் சுகாதாரத்துறை தான்மகேஸ்வரியின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1 லட்சம் தரவேண்டும்.
இந்தத் தொகையை தவறு செய்த டாக்டர்களிடமிருந்தே அரசு வசூலித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு தனது தீர்ப்பில் நீதிபதி சம்பந்தம் கூறியுள்ளார்.
-->