ஹஜ் பயணம் அழைத்து செல்வதாக ரூ.1.5 கோடி மோசடி செய்த "பலே" ஆசாமி
திருச்சி:
திருச்சியில் ஹஜ் பயணத்திற்கு அழைத்துப் போவதாகக் கூறி முஸ்லீம்களிடம் ரூ.1.5 கோடி வரைமோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி-பாலக்கரை பகுதியில் "ஹஜ் சர்வீஸஸ்" என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவருபவர் முகம்மது ஹனீபா. இவர் புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி, கரூர் ஆகியமாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லீம்களை அணுகி ஹஜ் பயணம் செல்ல ஏற்பாடு செய்வதாகக் கூறிபணம் வாங்கியுள்ளார்.
பெரம்பலூரைச் சேர்ந்த முகம்மது சலாம் என்பவரும் அவரது மனைவியும் இதேபோல் ரூ.1 லட்சம்வரை ஹனீபாவிடம் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட தேதியில் யாரையும் ஹஜ்பயணத்திற்கு அழைத்துச் செல்லவில்லை ஹனீபா.
இதையடுத்து சலாம் தம்பதியினர் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்அடிப்படையில் போலீஸார் ஹனீபாவைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின்போதுதான் ஏராளமான முஸ்லீம்களிடம் இது போல மோசடியில் அவர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. ரூ.1.5 கோடி வரை இவ்வாறு பண மோசடி செய்துள்ளார் ஹனீபா.
கைது செய்யப்பட்ட ஹனீபா பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.
-->












Click it and Unblock the Notifications