ராமேஸ்வரம் வந்த 5 இலங்கை அகதிகள்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலங்கையிலிருந்து ஒரு தமிழ்க் குடும்பம் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது.
இலங்கை மன்னார் மாவட்டம் பேசாலை பகுதியைச் சேர்ந்த டேனியல்ராஜ், அவரது மனைவி ரீட்டா, 3 குழந்தைகள் ஆகியோர்அகதிகளாக ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
தங்களை படகில் அழைத்து வருவதற்காக ரூ. 18,000 கொடுத்துள்ளனர்.
போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications