For Daily Alerts
Just In
நீதிபதியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வாலிபர்
ஈரோடு:
நீதிபதியிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியின் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு கூடுதல் மாஜிஸ்திரேட் ராமலிங்கத்தை அணுகிய ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ரத்தினம் செட்டியார்என்பவரின் மகன் மணிகண்டன், தங்களது குடும்பம் தொடர்பான வழக்கின் கோப்புகளைத் தருமாறுமிரட்டியுள்ளார்.
அதற்கு நீதிபதி மறுக்கவே தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
இதையடுத்து ஈரோடு காவல்துறைக் கண்காணிப்பாளர் சைலேஷ்குமார் யாதவிடம் நீதிபதி ராமலிங்கம் புகார்செய்தார்.
இதைத் தொடர்ந்து போலீஸார் மணிகண்டனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
-->
Comments
Story first published: Wednesday, March 5, 2003, 5:30 [IST]