தமிழகத்தை பாழடித்துவிட்டது திமுக: ஜெயலலிதா
திருச்சி:
தமிழகத்தை திமுக பாழடித்துவிட்டது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
கடந்த ஐந்து நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஜெயலலிதாதொடங்கி வைத்து வருகிறார்.
அந்த வகையில், திருச்சிக்கு இன்று வந்த ஜெயலலிதா, அங்கு நடந்த அரசு விழாவில் ரூ.209 கோடிமதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளம், இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் குடிநீர் திட்டம்ஆகியவை அவற்றில் முக்கியமான திட்டங்கள் ஆகும்.
இது தவிர சுமார் 15,000 ஏழை மக்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளையும் ஜெயலலிதாவழங்கினார்.
விழாவில் ஜெயலலிதா பேசியதாவது:
கொளுத்தும் வெயிலில் என் உரையைக் கேட்க வந்து நிற்கிறீர்கள். உங்களுக்கு என் நன்றி. நான் ஆட்சிக்கு வந்துசிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறேன். ஆனால், அது ஆணிகளால் ஆன சிம்மசானம். இதில் உட்கார்ந்து தான் மக்கள்நலப் பணிகளை செய்து கொண்டிருக்கிறேன்.
ஆட்சியில் இருந்த திமுகவால் தமிழகம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இருளில் மூழ்கிவிட்டது. ஒரு வீட்டைபுதிதாகக் கட்டிவிடுவது எளிது. ஆனால், திமுகவால் பாழடிக்கப்பட்ட இந்த வீட்டை (தமிழகத்தை) புதுப்பிப்பதுமிகக் கடினம். அந்த கடினமான பணியைத் தான் நான் செய்து கொண்டிருக்கிறேன் என்றார் ஜெயலலிதா.
-->












Click it and Unblock the Notifications