ஜெயலலிதாவின் பல்லவிகள்: கருணாநிதி பதில் தாக்கு
சென்னை:
தன் ஆட்சியின் மூலம் தமிழகத்துக்கு திருமகள் வந்து விட்டாள் என்று பல்லவி பாடும் முதல்வர்ஜெயலலிதா, அதே நேரத்தில் நிதிப் பற்றாக்குறை பல்லவியையும் பாடிக் கொண்டிருப்பது ஏன் என்றுகருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சத்தியத்தையும் உண்மையையும் விடாமல் பற்றிக் கொண்டிருப்பதால்தான் தமிழக மக்கள் எனக்குத்தொடர்ந்து வெற்றியை அளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
அப்படியானால் கடந்த 1996ம் ஆண்டு இந்த அம்மையார் உண்மையையும் சத்தியத்தையும்கடைப்பிடிக்காததால்தான் அதிமுக படுதோல்வி அடைந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?
எங்கே உண்மை, தர்மம், நீதி இல்லையோ அங்கு இருக்கப் போவதில்லை என்று கூறி திருமகளாகியலட்சுமி தன்னிடம் வந்து சேர்ந்து விட்டாள் என்று ஜெயலலிதா பேசியுள்ளார்.
பிறகு ஏன் பொழுது விடிந்து, பொழுது போன பின்பும் நிதிப் பற்றாக்குறை என்ற பல்லவியையேஅவர் பாடிக் கொண்டிருக்கிறார்?
மனு நீதிச் சோழன் வாழ்ந்த திருவாரூரில்தான் தங்கள் பிள்ளைகளை மட்டும் பத்திரமாக வைத்துக்கொண்டு ஊரார் பிள்ளைகளைப் போராட்டத்திற்கு வா என்று அழைக்கிற "உத்தமமான" தந்தைகள்உள்ளனர் என்று என்னை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார் ஜெயலலிதா.
அந்தப் பிள்ளைகளில் ஒருவர்தான் மிசா கைதியாக ஓராண்டு வரை சென்னை சிறையில்அடைபட்டுக் கிடந்தார். மேலும் இந்த அம்மையார் ஆட்சியில்தான் கடந்த ஆண்டும் அந்தப் பிள்ளைமதுரை சிறையில் வைக்கப்பட்டிருந்தார். உத்தமமான உள்ளம் படைத்த ஊரார் அனைவருக்குமேஇது தெரியும்.
ஜனநாயகம் ஆரோக்கியமாகவும், உயிர்த் துடிப்போடும் இருக்கிறது என்பதற்கு தான் முதல்வராகஇருப்பதே சாட்சி என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
அந்த ஜனநாயகம் ஆரோக்கியமாக உள்ளதோ, இல்லையோ தெரியவில்லை. ஆனால் அதன் உயிர்துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஜெயலலிதா தெளிவாகவும் சரியாகவும்தான்தெரிவித்துள்ளார் என்று அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications