For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பழனி பெண்கள் கல்லூரி மீண்டும் திறப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு

By Staff
Google Oneindia Tamil News

பழனி:

கல்லூரி முதல்வரே மாணவிகளை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்ததால் மூடப்பட்ட பழனிபெண்கள் கல்லூரி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டது.

கல்லூரிக்கு 5 நட்சத்திர அந்தஸ்து பெறுவதற்காக இந்தச் செயலை முதல்வர் சந்திரகாந்தா செய்ததாகக்கூறப்படுகிறது. மேலும் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகளை இரவு நேரத்தில் அவ்வப்போது கார்களில் வந்துசிலர் அழைத்துச் செல்வதாகவும் இதற்கு கல்லூரி முதல்வருக்கும் தொடர்பு இருப்பதாகவும் சரமாரியாக புகார்கள்எழுந்தன.

இதையடுத்து பழனி கல்லூரி மாணவிகளும், அவர்களுக்கு ஆதரவாக பிற கல்லூரி மாணவ- மாணவிகளும்போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் பழனி கல்லூரி மூடப்பட்டது. இது குறித்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி தலைமையில் ஒரு குழுமாணவிகளிடம் விசாரணை நடத்தியது. பாலியல் பலாத்காரம் ஏதும் நடக்கவில்லை என இக் குழு அறிக்கைதந்தது.

இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் காரணமாககல்லூரி மாணவிகள் அனைவரும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X