For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொது இடங்களில் "தம்" அடித்து சிக்கிய 500 பேருக்கு அபராதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் பொது இடங்களில் புகை பிடித்ததாக 500 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பொது இடங்களில் புகை பிடிக்கவும் எச்சில் துப்பவும் தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்தசட்ட மசோதாவுக்கு சமீபத்தில் தான் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் ஒப்புதல் வழங்கினார்.

இந்தத் தடைகளை மீறுபவர்களுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கும் வகையில்இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் பொது இடங்களில் மக்கள் புகை பிடிப்பதை எதிர்த்து சென்னையில்பா.ம.க. மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. புகை பிடிப்பதற்கு எதிராக தமிழக அரசுசட்டம் கொண்டு வந்துள்ளதே தவிர அது முறையாக அமல்படுத்தப்படவில்லை என்றுபோராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் சென்னையில் நேற்று மட்டும் பொது இடங்களில் "ஹாயாக" புகை பிடித்துக்கொண்டிருந்த சுமார் 500 பேரைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

சிக்கிய 500 பேரும் அபராதம் கட்டிய பின்னரே விடுவிக்கப்பட்டனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X