மலேசியாவில் வேலை தருவதாக இளைஞர்களை ஏமாற்றிய இருவர் சிக்கினர்
சென்னை:
தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு முறைகேடாக ஆட்களை அனுப்பி அங்கு அவர்களை பெரும்தொல்லைக்கு ஆளாக்கிய நிறுவன அதிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலேசியா துறைமுகத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை தருவதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 63இளைஞர்களை சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள ஐ.ஜி. என்டர்பிரைசஸ் என்றநிறுவனம் அனுப்பி வைத்தது.
ஆனால் மலேசியாவில் அந்த இளைஞர்களுக்கு உரிய வேலைகள் வழங்கப்படவில்லை. குறைந்தஊதியத்துக்கு கூலி வேலைகள் வாங்கப்பட்டன. அந்தச் சம்பளமும் கூட குறித்த நேரத்திற்குத்தரப்படவில்லை. சம்பளம் கேட்டவர்களுக்கு அடி உதை விழுந்துள்ளது. அவர்கள் தனி அறையில்பூட்டி வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர்.
இது குறித்து சில தொழிலாளர்கள் தங்கள் பெற்றோருக்கு போன் மூலமாகவும், கடிதம் மூலமாகவும்தெரியப்படுத்தினர். 3 பேர் தப்பியும் தமிழகத்துக்கு வந்துவிட்டனர்.
இவர்கள் கொடுத்த புகாரை வைத்து சென்னை மாநகர போலீசார் விசாரணையைஆரம்பித்துள்ளனர்.
ஐ.ஜி. என்டர்பிரைசஸ் என்ற நிறுவன உரிமையாளர் மாரிமுத்துவிடமும், ஏஜெண்டானபாலசுப்பிரமணியம் மற்றும் இன்னொரு நபரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
விரைவில் இவர்கள் கைதாகலாம் என்று தெரிகிறது.
-->