இந்தியர்கள் சித்திரவதை: மலேசிய அமைச்சர் வருத்தம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மலேசியாவில் அந்நாட்டு போலீசாரால் இந்தியர்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அந்நாட்டுஅமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் உள்ள பிரீக்பீல்ட்ஸ் பகுதியில் வசித்து வரும் 270 இந்தியர்களின் வீடுகளிலும் அத்துமீறி நுழைந்தமலேசியப் போலீசார் அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளையும், விசா பக்கங்களையும் கடுமையாகச்சேதப்படுத்தினர்.

மேலும் சுமார் 195 பேரைக் கைது செய்து போலீஸ் காவலிலும் வைத்தனர். இவர்களில் ஏராளமானவர்கள்சாப்ட்வேர் இன்ஜினியர்கள். போலீஸ் நிலையத்தில் இந்தியர்களை மண்டியிட வைத்தும், அடித்தும், உதைத்தும்போலீசார் மிகவும் கேவலமாக நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் டெல்லியில் உள்ள மலேசியத் தூதர் ஜூசிகியோவை நேரில் அழைத்து மத்திய அரசுகடும் கண்டனத்தைத் தெரிவித்தது. மேலும் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் கூட்டமைப்பான "நாஸ்காம்"அமைப்பும் இச்சம்பவத்தைக் கண்டித்துள்ளது.

இந்நிலையில் டெல்லி வந்துள்ள மலேசிய சிறு தொழில் வளர்ச்சித் துறை அமைச்சரான முகமது நாஸ்ரி அப்துல்ஆசிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,

மலோசியாவில் உரிய விசா மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் யாரும் தங்கியுள்ளார்களாஎன்று தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறோம். ஆனால் அவ்வாறு நடந்த ஒரு சோதனையின்போதுஇந்தியர்களை எங்கள் நாட்டுப் போலீசார் தாக்கியுள்ள சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது.

இதில் மலேசிய அரசுக்கு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. இது தொடர்பாக முழு விசாரணை நடத்தமலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இரண்டொரு நாட்களில் விசாரணை முடிந்து விடும். குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தால் மலேசியப்போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியர்களை
சித்திரவதை செய்த மலேசிய போலீஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+