கொடைக்கானல் மலையில் ஆஸ்திரேலியரின் எலும்புக் கூடு கண்டெடுப்பு
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன ஆஸ்திரேலியநாட்டைச் சேர்ந்த மில்லர் என்பவரின் எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் தவறிவிழுந்து இறந்ததாகக் கருதப்படுகிறது.
ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் மில்லர். இவர் மூன்று மாதத்திற்கு முன்பு கொடைக்கானல்வந்தார்.
அங்குள்ள அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினார். சில நாட்கள்கழித்து அவரைக் காணல்லை. இதையடுத்து அவரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் பசுமைப் பள்ளத்தாக்குப் பகுதியில் ஒரு எலும்புக் கூடு காணப்படுவதாகப்போலீஸாருக்குத் தகவல் வந்தது. உடனே அந்தப் பகுதிக்குப் போலீஸார் விரைந்து சென்றனர்.
அங்கு அமெரிக்க டாலர்கள், பாஸ்போர்ட் மற்றும் மண்டையோடு, எலும்புக் கூடு ஆகியவைகிடந்தன. அந்த பாஸ்போர்ட்டில் மில்லரின் படம் இருந்தது. எனவே எலும்புக் கூட்டுக்குச்சொந்தக்காரர் மில்லர்தான் என்று கருதப்படுகிறது. அந்த எலும்புக்கூடு கைப்பற்றப்படடு,பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
பசுமைப் பள்ளத்தாக்குப் பகுதியைச் சுற்றிப் பார்க்க வந்தபோது, கால் தவறி அவர் கீழே விழுந்துஇறந்திருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications