For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அயோத்தி: அகழ்வாராய்ச்சி பணிக்கு தடை கோரி வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

அயோத்தி:

அயோத்தியில் ராமர் கோவில் இருந்ததா என்பதைக் கண்டறியும் அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்குத்தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததா என்பதைக் கண்டறிவதற்காகநிலத்தைத் தோண்டி ஆராய்ச்சி செய்யுமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 5ம் தேதி மத்தியஅரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி நேற்று முன்தினம் மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் நிலத்தைத் தோண்டும்பணியைத் தொடங்கினர். இன்று மூன்றாவது நாளாக நிலத்தைத் தோண்டும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.

இந்நிலையில் அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்குத் தடை கோரி நவித் யார்கான் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தப் பணியும் நடக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவேஉத்தரவிட்டுள்ளது. அப்படி இருக்கும்போது அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு மட்டும் எப்படிஉத்தரவிடலாம் என்று தன் மனுவில் கேள்வி எழுப்பியுள்ள நவித் யார்கான், எனவே அந்தப்பணிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.

இதற்கிடையே நேற்று நடைபெற்ற அகழ்வாராய்ச்சிப் பணிகளின் போது செங்கற்கள் மற்றும்கிழிஞ்சல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே இன்று மட்டும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மொகரம்பண்டிகை இன்று கொண்டாடப்படுவதால் அசம்பாவிதம் எதுவும் நேர்ந்துவிடக் கூடாதுஎன்பதற்காகவே தோண்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X