70 வழக்குகள்: கலங்கடித்த கொள்ளை கும்பல் சிக்கியது
சென்னை:
சென்னையில் 70 வழக்குகளில் தொடர்புடைய 7 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலை சிறப்புப்படை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் சமீப காலத்தில் நடந்த வீடு புகுந்து திருடுதல், வழிப்பறிக் கொள்ளைகள், வாகனத்திருட்டு என சகலவிதமான திருட்டுகளில் இந்தக் கும்பலுக்குத் தொடர்பு உள்ளது.
நகரில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்ததும் போலீஸ் ஆணையர் விஜயக்குமார் உத்தரவின் பேரில்பல்வேறு தனிப் படைகள் அமைக்கப்பட்டன. இந்தப் போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில்தற்போது 7 பேர் சிக்கியுள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த லாரன்ஸ், ராமு (சிவகங்கை), சீனி (கொரட்டூர்), செல்வராஜ் (சோழாவரம்),குட்டி (வில்லிவாக்கம்), அலெக்ஸ் (திரு. வி.க. நகர்) பாபுராவ் ஆகியோர்தான் பிடிபட்டுள்ளனர்.
வேளச்சேரி, அண்ணா நகர், வில்லிவாக்கம், கே.கே. நகர், கிண்டி, கோயம்பேடு, கோடம்பாக்கம்,அடையார், சைதாப்பேட்டை, வளசரவாக்கம், கொரட்டூர், அம்பத்தூர், ஆதம்பாக்கம்,பழவந்தாங்கல், மடிப்பாக்கம், குரோம்பேட்டை என சென்னையின் அனைத்து முக்கியமானபகுதிகளிலும் இந்தக் கும்பல் கைவரிசையைக் காட்டியுள்ளது.
இவர்களில் ராமு என்பவன் பூட்டை உடைப்பதில் மகா கில்லாடி என்று போலீஸார் தெரிவித்தனர்.எந்த வகையான பூட்டையும் சில விநாடிகளில் உடைத்து விடுவானாம் ராமு. இவன் ஏற்கனவே 7முறை கைதாகி சிறைவாசம் அனுபவித்தவன்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 300 பவுன் நகை, 20 கிலோ வெள்ளி, எட்டு மோட்டார்சைக்கிள்கள், டி.வி., டேப் ரெக்கார்டர், வி.சி.ஆர். உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
-->












Click it and Unblock the Notifications