வீடியோ கடைக்காரர்களே முன் வந்து போலீசாரிடம் ஒப்படைத்த 300 திருட்டு வி.சி.டிக்கள்
Subscribe to Oneindia Tamil
கரூர்:
திருட்டு வி.சி.டிக்களை போலீஸார் வேட்டையாடி வரும் நிலையில், கரூர் நகரில் உள்ள பல்வேறுவீடியோ பார்லர்களைச் சேர்ந்தவர்கள் தங்களிடம் உள்ள நூற்றுக்கணக்கான திருட்டு வி.சி.டிக்களைப்போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
மொத்தம் 300 ஆபாச வி.சி.டிக்கள், புதுப்பட வி.சி.டிக்கள் ஆகியவை போலீஸாரிடம்ஒப்படைக்கப்பட்டன.
வீடியோ கடைக்காரர்கள் தங்களிடம் உள்ள வி.சி.டிக்களை தாங்களே முன் வந்து போலீஸில்ஒப்படைத்து விட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று போலீஸார் தொடர்ந்துகூறி வருகின்றனர்.
அந்த முயற்சிகளுக்குப் பலனாகத்தான் கரூரில் தற்போது நூற்றுக்கணக்கான வி.சி.டிக்கள்ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications