ரூ.6 கோடி மதிப்பு ஹெராயின் பறிமுதல்: இலங்கை தமிழர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரூ.6 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை கடத்திச் சென்ற இலங்கைத் தமிழரைபோலீஸார் கைது செய்தனர்.
இலங்கையைச் சேர்ந்த ஜெயா என்ற ஜெயேந்திரன் என்பவர் ஹெராயினுடன் ஆட்டோவில்செல்வதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து போரூர் சாலையில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு ஆட்டோநிற்காமல் சென்றது. உடனே ஆட்டோவைத் துரத்திப் பிடித்து நிறுத்தி அதில் இருந்த ஜெயேந்திரனிடம்போலீஸார் சோதனையிட்டனர்.
அப்போது அவர் வைத்திருந்த இரண்டு ரெக்ஸின் பைகளுக்குள் ஹெராயின் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவற்றின் எடை 6.4 கிலோவாகும். இதன் மதிப்பு ரூ.6கோடியாகும்.
அதைப் பறிமுதல் செய்த போலீசார் ஜெயேந்திரனையும் கைது செய்தனர்.
-->












Click it and Unblock the Notifications