For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொடைக்கானலை சுற்றிப் பார்த்தார் கருணாநதி

By Staff
Google Oneindia Tamil News

கொடைக்கானல்:

புத்தகம் எழுதுவதற்காக கொடைக்கானல் சென்றுள்ள திமுக தலைவர் கருணாநிதி கொடைக்கானலின்இயற்கை அழகை சுற்றிப் பார்த்து ரசித்தார்.

கடந்த 14ம் தேதி கொடைக்கானல் சென்று சேர்ந்தார் கருணாநதி. பிரபல ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம்கார்க்கி எழுதிய "தாய்" நூலை தமிழில் கவிதை நடையில் மொழி பெயர்ப்பு செய்யும் பணிக்காககொடைக்கானல் சென்றுள்ளார் கருணாநிதி.

தனது மகன் அழகிரியின் பங்களாவில்தான் அவர் தங்கியுள்ளார். இரண்டு நாட்களாக புத்தகம்எழுதிய அவர் நேற்று எழுத்துக்கு ஓய்வு கொடுத்துவிட்டு வெளியே வந்தார்.

காரில் சென்று கொடைக்கானலை சுற்றிப் பார்த்து ரசித்தார். பசுமைப் பள்ளத்தாக்கு, ஏரி, பில்லர் ராக்உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று இயற்கை அழகை ரசித்துப் பார்த்தார் கருணாநிதி.

மேலும் ஆங்காங்கே கடைவீதிகளில் கூடியிருந்தவர்களிடம் பேசினார். காரை நிறுத்திவியாபாரிகளிடமும் சில நிமிடங்கள் பேசினார்.

கருணாநிதியைத் திடீரென்று அங்கு பார்த்ததும் கொடைக்கானல்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும்மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் தனது பங்களாவிற்கு கருணாநிதி திரும்பினார்.

இன்று தொடர்ந்து நூலை எழுதுகிறார் கருணாநிதி. அடுத்த ஒரு சில நாட்கள் வரை அவர்கொடைக்கானலிலேயே தங்கி இருப்பார் என்று தெரிகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X