விஷம் வைத்து 2 சிறுத்தைகளைக் கொன்ற 4 பேர்
சேலம்:
கால்நடைகளை வேட்டையாடி விடும் என்பதால் 2 சிறுத்தைகளை விஷம் வைத்துக் கொன்றதாக 4பேரை சேலம் வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் லக்கப்பட்டி காட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் காவேரி, மாதப்பன், சின்னான்,மணி. இவர்கள் வசித்த கிராமத்துப் பகுதியில் ஒரு ஆண் சிறுத்தையும் பெண் சிறுத்தையும் அடிக்கடிநடமாடிக் கொண்டிருந்தன.
சிறுத்தைகளால் தங்களது கால்நடைகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதிய நால்வரும்சிறுத்தைகளைக் கொல்ல முடிவு செய்தனர்.
இதையடுத்து காட்டுக்குள் சென்ற அவர்கள் அங்கு ஒரு இறந்த மாட்டைப் போட்டனர். பின்னர்அதன் மீது விஷத்தை தூவிவிட்டு வந்து விட்டனர்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த இரண்டு சிறுத்தைகளும் விஷம் கலந்த மாட்டைச் சாப்பிட்டதால்மயங்கி விழுந்து அங்கேயே இறந்தன.
இதைத் தொடர்ந்து காவேரி, மாதப்பன், சின்னான் மற்றும் மணி ஆகிய நான்கு பேரும் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
-->












Click it and Unblock the Notifications