ஜனதா கட்சி கலைப்பு: ஜனதா தளத்துடன் இணைகிறார் சு. சுவாமி
மதுரை:
அகில இந்திய ஜனதாக் கட்சியைக் கலைத்து விட்டு அதன் தலைவரான சுப்பிரமணியம் சுவாமி,எஸ்.ஆர். பொம்மை தலைமையிலான அகில இந்திய ஜனதா தளத்தில் இணைகிறார். இருப்பினும்ஒருங்கிணைந்த கட்சிக்கு சுவாமியின் ஜனதாக் கட்சியின் சின்னமும் கொடியுமே தொடரும்.
மதுரையில் இது தொடர்பாக நிருபர்களிடம் சுவாமி பேசுகையில்,
சமீபத்தில் ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் பெங்களூரில் நடந்தது. அப்போது ஜனதாதளத்துடன் இணைவது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ராமகிருஷ்ண ஹெக்டேயின் தீவிர முயற்சி காரணமாகவே இந்த இணைப்பு ஏற்படவுள்ளது.விரைவில் இணைப்புக்கான இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு தேதி முடிவு செய்யப்படும்.
இணைப்புக்குப் பின் ஒருங்கிணைந்த கட்சியின் அரசியல் விவகாரக் குழு தலைவராக நான்செயல்படுவேன். தேசிய செயல் தலைவராக தொழிலதிபர் விஜய் மல்லையா இருப்பார்.
விரைவில் காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு மாற்றாக மிகப் பெரிய தேசியக் கட்சியாக அகில இந்தியஜனதா தளம் விளங்கும் என்றார் சுவாமி.
பேட்டியின்போது ஜனதாக் கட்சியின் தமிழக தலைவர் சந்திரலேகாவும் உடன் இருந்தார்.ஜனதாதளத்தில் இணைந்த பிறகு சந்திரலேகா என்ன பதவி வகிப்பார் என்பதை சுவாமி கூறவில்லை.
-->












Click it and Unblock the Notifications