சென்னையில் தலைவிரித்து ஆடும் குடிநீர் பிரச்சினை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் குடிநீர் கோரி பொது மக்கள் மெட்ரோ வாட்டர்அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோடை காலம் வந்து விட்டால் சென்னை மக்கள் குடமும் கையுமாகத் தண்ணீருக்காக அலையஆரம்பித்து விடுவார்கள். இந்த ஆண்டு அது இப்போது தொடங்கியுள்ளது. நகரின் சில பகுதிகளில்கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் கடந்த 20 நாட்களாகவே குடிநீர் விநியோகம் சரிவர இல்லை.இதனால் பொறுமையிழந்து போன பொதுமக்கள் இன்று மெட்ரோ வாட்டர் அலுவலகத்தைமுற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடியதால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாகத் தங்களது பகுதிகளுக்கு தண்ணீர் தராவிட்டால் போராட்டம் தொடரும் என்று அவர்கள்தெரிவித்தனர். உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து பொதுமக்களைசமாதானப்படுத்தினர்.

விரைவில் அப்பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்று கூறிய பின்னரே மக்கள்போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதற்கிடையே சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் மளமளவென குறைந்துவருகிறது. இதனால் விரைவில் சென்னை நகரில் பெரும் குடிநீர்ப் பிரச்சினை ஏற்படலாம் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் பூண்டி, தாமரைப்பாக்கம், செம்பரம்பாக்கம் ஏரிகளில்தான் ஓரளவுதண்ணீர் உள்ளது. அங்கும் நீர் வற்றத் தொடங்கி விட்டால் இந்தக் கோடை காலத்தில் கடும் குடிநீர்ப்பற்றாக்குறையை சென்னை மாநகர் சந்திக்கும் அபாயம் உள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+