சென்னை மருத்துவமனையில் காணாமல் போன குழந்தை கிடைத்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை எழும்பூர் குழந்கைள் நல மருத்துவமனையிலிருந்து சமீபத்தில் காணாமல் போன, பிறந்து 4 நாளே ஆனஆண் குழந்தை கிடைத்து விட்டது.

எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஜெசிந்தா சகாய மேரி என்ற பெண்ணுக்கு கடந்த12ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் உடல் நிலை மோசமாக இருந்ததால் அது இன்குபேட்டர்கருவிக்குள் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் 15ம் தேதி மாலை அந்தக் குழந்தை திடீரென்று காணாமல் போய்விட்டது. சென்னையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது இந்தச் சம்பவம்.

இந்நிலையில் தற்போது குழந்தை கிடைத்துள்ளது. இன்று காலை மருத்துவமனைக்கு வந்த ஒருவர் குழந்தையைஒப்படைத்தார்.

இதையடுத்து போலீஸார் அந்த நபரை வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் யார்,குழந்தையை எதற்காக எடுத்துச் சென்றார், ஏன் திருப்பிக் கொடுத்தர் என்று விசாரணை நடந்து வருகிறது.

குழந்தை கிடைத்த செய்தி தாய் ஜெசிந்தாவுக்குத் தெரிவிக்கப்பட்டதும் அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+