For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலவச மின்சாரம் ரத்து: 3 கட்ட போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இலவச மின்சாரத்தை ரத்து செய்தததைக் கண்டித்து 3 கட்டமாக போராட்டம் நடத்த அனைத்து விவசாயிகள்சங்கங்களும் முடிவு செய்துள்ளன. இலவச மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் வரை மின் கட்டணத்தைசெலுத்துவதில்லை என்றும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

இலவச மின்சாரம் ரத்து தொடர்பாக விவாதிக்க தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிங்கள் சங்கங்களின்கூட்டமைப்பின் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்துகூட்டமைப்பின் தலைவரும் திமுக விவசாய அணி செயலாளருமான கே.பி. ராமலிங்கம் கூறுகையில்,

பஞ்சாயத்து அளவில் ஏப்ரல் 3ம் தேதி பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும். அடுத்தபடியாக, தாலுகாதலைநகரங்களில் மே 2ம் தேதி பேரணிகள் நடத்தப்படும். இறுதியாக செப்டம்பர் 1ம் தேதி முதல் மின் வாரியஅலுவலகங்களை விவசாயிகள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவார்கள்.

மின் வாரிய அதிகாரிகள், அலுவலர்கள், கிராமங்களுக்குள் நுழைந்து, மின் கட்டணத்தை வசூலிக்க விவசாயிகள்அனுமதிக்க மாட்டார்கள். மின் கட்டணம் செலுத்தாத விவசாயிகளின் மின் இணைப்பைத் துண்டிக்க வரும்அதிகாரிகளையும் நாங்கள் கிராமங்களுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்றார் ராமலிங்கம்.

அதிமுகவைத் தவிர பிற கட்சிகளின் விவசாய அணிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டன. மொத்தம் 56விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றதாக ராமலிங்கம் தெரிவித்தார்.

21ல் விடுதலை சிறுத்தைகள் போராட்டம்:

இதற்கிடையே மின் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னையில் வரும் 21ம் தேதி போராட்டம் நடத்த விடுதலைச்சிறுத்தைகள் முடிவு செய்துள்ளனர்.

மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது, விவசாயிகளுக்கு மீண்டும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தபோராட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X