புஷ் ஒரு முட்டாள்: ஈராக்
பாக்தாத்:
போருக்கு எதிராக குரல்கள் உலகெங்கும் ஓங்கிக் கொண்டிருந்தாலும் குவைத் எல்லையில் இருந்து அமெரிக்கப் படைகள் ஈராக் நோக்கிநகர ஆரம்பித்துவிட்டன.
நேற்றிரவு அவை ஈராக்கை நோக்கி பல கி.மீ. தூரம் முன்னேறின. பாலைவனத்தில் இரவு நேர போர்ப் பயிற்சியிலும் ஈடுபட்டன.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும், பிரிட்டன் பிரதமர் டோனி பிளேரும் உடனே பதவி விலக வேண்டும் என ஈராக் பதில்கெடு விதித்துள்ளது.
அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் நஜி சப்ரி நிருபர்களிடம் பேசுகையில், ஜார்ஜ் புஷ்ஷை முட்டாள் மனிதர் என்று குறிப்பிட்டார்.அவர் கூறியதாவது: 48 மணி நேர கெடுவை அதிபர் சதாம் நிராகரித்துவிட்டார். புஷ் மற்றும் டோனி பிளேர் ஆகிய இருவரும் உடனேபதவி விலக ஈராக் உத்தரவிடுகிறது.
ஸ்பெயின் குடியரசா அல்லது அரசாட்சி நடக்கும் நாடா என்பது கூடத் தெரியாத முட்டாள் தான் ஜார்ஜ் புஷ். ஈராக்கின் எண்ணெய்வளத்தைக் குறி வைத்து நடக்கும் இந்தப் போரில் ஜார்ஜ் புஷ் தான் முதல் குற்றவாளி. போர்க் குற்றவாளியான அவர் மீது நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டும் என்றார்.
அணி மாறும் ஈராக் தளபதிகள்?
இதற்கிடையே ஈராக்கின் மிக முக்கியப் படையான ரிபப்ளிகன் கார்ட்டின் முக்கிய தளபதிகள் அமெரிக்க உளவுப் பிரிவினரைத் தொடர்புகொண்டு வருவதாகவும், அமெரிக்காவுக்கு ஆதரவாக அணிமாற ஆயத்தமாக இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இந்தப் படையிடம் தான் சதாம் ஹூசேனைக் காக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படையைத் தான் அமெரிக்கா குறிவைத்துத் தாக்க உள்ளது. இந் நிலையில் அமெரிக்கத் தாக்குதலை சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்துள்ள இப் படையின் மூத்ததளபதிகள் அணி மாற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. கூறியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications