மூன்றாம் உலகப் போர் வெடிக்கும்: கமல்
சென்னை:
ஈராக்கை அமெரிக்கா தாக்கினால் 3ம் உலகப் போர் வெடிக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ஈராக் போருக்கு உலகெங்கும் பல லட்சக்கணக்கான கடந்த சில வாரங்களாக மக்கள் பேரணிகளை நடத்தி வந்தனர்.அந்த வகையில் கடந்த வாரம் கேரளாவில் பிரம்மாண்ட பேரணி ஒன்றும் கமல் தலைமையில் நடந்தது.
இந்நிலையில் கமல் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,
எந்த மாளிகையானாலும், சங்கர மடமானாலும் மனிதனுக்கு சேவை செய்யவில்லை என்றால் அது பயனற்றது. அதுவெள்ளை மாளிகை ஆனாலும் சரி. மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும் வேலையை அமெரிக்கா செய்யக்கூடாது.
உலகப் போர் வருவதற்கான எந்தச் செயலையும், யார் செய்தாலும் அது தவறுதான். இந்தத் தவறை அமெரிக்காசெய்து வருகிறது. போருக்காக செலவிடப்படும் பணத்தில் 5 சதவீதத்தை செலவிட்டால் உலகின் வறுமை முற்றிலும்ஒழியும்.
மேலும் பாகிஸ்தான் மீதான வெறுப்பு உணர்வை இந்தியா குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார் கமல்.
-->