ஜாமீன் கோரி பொடா நீதிமன்றத்தில் நெடுமாறன் மனு தாக்கல்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவரான பழ. நெடுமாறன் சார்பில்பொடா சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன், சுப வீரபாண்டியன்,பாவாணன், டாக்டர் தாயப்பன் மற்றும் பரந்தாமன் ஆகிய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு சிறைகளில்அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஐந்து பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதற்கான நகல்களும் வழங்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் நெடுமாறன் உள்ளிட்ட ஐந்து பேரையும் ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அவர்கள் பொடாநீதிமன்றத்திலேயே ஜாமீன் கோரலாம் என்று கூறியது.
இதையடுத்து இந்த ஐந்து பேர் சார்பிலும் வழக்கறிஞர் புருஷோத்தமன் பொடா நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட பொடா நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன், இதன் மீதானவிசாரணையை வரும் ஏப்ரல் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-->